சிறுபாக்கம்: விநாயகநந்தல் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவில் ஏராளமானோர் வடம் பிடித்து இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். சிறுபாக்கம் அடுத்த விநாயகநந்தல் மாரியம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த 20ம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியெது. அதைத் தொடர்ந்து தினசரி காலை 8:00 மணியளவில் அபிஷேக ஆராதனை, இரவு 9:00 மணிக்கு அலங்கரித்த வாகனத்தில் அம்மன் வீதியுலா நடந்தது. கடந்த ௨௧ம் தேதி தேர்த்திருவிவையொட்டி காலை 7:00 மணியளவில் சிறப்பு அபிஷேக ஆராதனை, மாலை 4:00 மணிக்கு ஊரணி பொங்கல் வைத்து வழிபட்டனர். மாலை 5:00 மணியளவில் நடந்த தேர்த்திருவிழாவில், திட்டக்குடி எம்.எல்.ஏ., கணேசன் தேரை வடம் பிடித்து இழுத்து துவங்கி வைத்தார்.