உலக இயக்கத்தின் உயிர்துடிப்பாக இருப்பவர் சிவன். சதாசர்வ காலமும் இடைவிடாமல் ஆடிக்கொண்டே உலகத்தை இயக்குகிறார். படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் என்னும் ஐந்தொழில்களை நடனத்தின் போது நடத்துகிறார். இதனை பஞ்ச கிருத்தியம் என்று குறிப்பிடுவர். நுண்ணிய அணுமுதல் ஆகாயம் வரை அனைத்தையும் இயக்குபவர் அவரே.