சிவபெருமான் அருவம், உருவம், அருவுருவம் என்னும் மூன்று வடிவம் கொண்டவர். இம்மூன்று வடிவங்களிலும் சிவபெருமான் அருள்புரியும் தலம் சிதம்பரம். மூலவர் திருமூலநாதர் அருவுருவத்திலும்(லிங்கம்), நடராஜர் உருவத்திலும், சிதம் பர ரகசியம் என்னும் வெட்டவெளியில் உருவமற்ற அருவ நிலையிலும் சுவாமி காட்சிதருகிறார்.