கன்னிவாடி: கொரலம்பட்டியில் புனித சூசையப்பர் ஆலய திருவிழா நடந்தது. புனிதர் கொடி ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு, கொடியேற்றம் நடந்தது. பொங்கல் அழைப்பு, திருவிழா ஆடம்பர கூட்டுத்திருப்பலி, சொரூப அழைப்பு நடந்தது. அலங்கரிக்கப்பட்ட மின்ரதத்தில், சூசையப்பர் ஊர்வலம் நடந்தது. சுற்றுப்புற கிராமங்களைச்சேர்ந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.