நரசிம்மர் என்றாலே சிங்க முகமும், மனித உடலும் கொண்ட தோற்றத்தை உடையவர் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், ஆந்திர மாநிலம் விஜயவாடாவுக்கு அருகில் உள்ள, ஆகிரிபள்ளி எனும் திருத்தலத்தில் லக்ஷ்மி நரசிம்மர் புலி முகம் கொண்டவராகக் காட்சி அளிக்கிறார். இவர் வியாக்ர நரசிம்மர் என்று அழைக்கப்படுகிறார்.