போதி மரத்தடியில்தான் புத்தர் ஞானம் பெற்றார். புளிய மரத்தடியில்தான் நம்மாழ்வாருக்கு ஞானம் கிடைத்தது. அரச மரத்தடியில் அமர்ந்தபடி திருமந்திரம் செய்தார் திருமூலர். குருந்த மரத்தடியில்தான் மாணிக்கவாசகர் குருவைக் கண்டார். உலகுக்கே நிழல் கொடுத்த ஞானிகளுக்கு நிழல் கொடுத்த பெருமை மரங்களுக்கு உண்டு.