Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திண்டிவனம் இலுப்பதோப்பு கோவிலில் ... கொரட்டூர் சீயாத்தம்மன் கோவிலில் 60 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உலக சித்தர் மரபுத் திருவிழா: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஆக
2016
12:08

சென்னை: சென்னையில் நடந்த உலக சித்தர் மருபுத் திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.சித்த மருத்துவம், பல நுாறு ஆண்டுகளாக பயன்பாட்டில் இருக்கும் பக்க விளைவுகளற்ற மருத்துவ முறை. இதை நவீன ஆய்வுகளின் அடிப்படையில், உலக மக்களுக்கு வழங்க, உலக சித்த மருத்துவ அறக்கட்டளை செயல்படுகிறது. அந்த அறக்கட்டளை, உலக சித்தர் மரபுத் திருவிழா - 2016 என்ற கருத்தரங்கை ஆக., 13, 14ம் தேதிகளில், ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள, எம்.ஜி.ஆர்., ஜானகி மகளிர் கல்லுாரியில் நடத்தியது. அதில், பல்வேறு துறைசார்ந்த வல்லுனர்கள், களப்பணியாளர்கள் பங்கேற்று, இயற்கையுடன் இணைந்த வாழ்வியலின் முக்கியத்துவம் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

கருத்தரங்கில், நுாற்றுக்கணக்கான மூலிகைகள், 300க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல், மரபு விதைகள் கண்காட்சி நடந்தது. வீட்டுத் தோட்ட பயிற்சி; தமிழ் இசைக் கருவிகள்; பாரம்பரிய சமையல் பயிற்சிப் பட்டறை; வர்மக் கலை; இயற்கை விவசாயம் ஆகியவை இடம் பெற்றன. சித்த மருத்துவ முகாமும் நடந்தது.பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்களுக்கிடையே மரபு குறித்து போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன. இரண்டு நாள் கருத்தரங்கில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

இயற்கை உணவிற்கு மவுசு: கருத்தரங்கை முன்னிட்டு, மூலிகை உணவகம் சார்பில், இயற்கை உணவு தயாரித்து வழங்கப்பட்டது. இதில், உளுந்தங்களி, வெந்தயக்களி, அவல் கேசரி, குதிரைவாலி பொங்கல், முடக்கற்றான், பச்சை பயறு தோசை, சோள பணியாரம், கருப்பு எள்ளு கொழுக்கட்டை, தினை அல்வா, ஆவாரம்பூ சாம்பார், பிரண்டை துவையல், வரகு தயிர்சாதம், சீரகசம்பா பிரியாணி, சாமை கீரை சாதம், மூலிகை சூப் வகைகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பந்தலுார்: பந்தலுார் அருள்மிகு ஸ்ரீ திருமுருகன் கோவில் கட்டு மான பணிகள் நடந்து வரு கிறது. கோவிலுக்கு ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவில் புதிய ராஜகோபுரங்களுக்கு நிலைப்படி பிரதிஷ்டை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஓணகாந்தேஸ்வரர் கோவிலில், ஈரோடு திருத்தொண்டீசுவரர் உழவாரப் பணி குழுவினர் ... மேலும்
 
temple news
பாலக்காடு: பாலக்காடு அருகே, செராடு வனதுர்க்கை அம்மன் கோவில் உற்சவ விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.கேரள ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கோட்டாயி அருகே உள்ளது செம்பை பார்த்தசாரதி கோவில். இங்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar