பதிவு செய்த நாள்
31
ஆக
2016
12:08
குன்னுார்: பாய்ஸ்கம்பெனி துாய ஆரோக்கிய அன்னை தேவாலய விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. அருவங்காடு பாய்ஸ்கம்பெனி துாய ஆரோக்கிய அன்னை திருத்தல ஆண்டு விழா, வரும், 8ம் தேதி நடக்க உள்ளது. நேற்று முன்தினம் மாலை, கேட்டில் பவுண்ட் பகுதியில் இருந்து மாதா கொடியை, பக்தர்கள் பவனியாக, தேவாலயம் நோக்கி எடுத்து வந்தனர். பாய்ஸ்கம்பெனி புனித அன்னம்மாள் பள்ளி மாணவியரிடன் பேண்டு வாத்திய இசையின் பின்னணியில் நடந்த பவனியை தொடர்ந்து, மாலை, 5:00 மணிக்கு, மறைமாவட்ட முதன்மை குரு கிறிஸ்டோபர் லாரன்ஸ் தலைமையில், கொடிக் கம்பத்தில் கொடியேற்றப்பட்டது. வரும், 7ம் தேதி வரை தினசரி மாலை, 5:00 மணிக்கு சிறப்பு நவநாள், திருப்பலி, மறையுரை, வேண்டுதல் தேர் நடத்தப்படுகிறது. வரும், 8ம் தேதி ஆண்டுப் பெருவிழா கொண்டாடப்பட உள்ளது. விழா ஏற்பாடுகளை, பங்கு குரு ஜார்ஜ் டேவிட் மற்றும் பங்கு மக்கள் செய்து வருகின்றனர்.