திருப்பதி பெருமாளின் வலதுகரம் அவரது திருவடியை காட்டியபடி கீழ் நோக்கி இருக்கும். பாலாஜி இருக்க பயமேன் என்பதை இதன் மூலம் அவர் நமக்கு உணர்த்துகிறார். நவக்கிரகங்கள் பெருமாளின் உத்தரவுப்படி செயல்பட்டு நன்மை, தீமையை உண்டாக்குகின்றன. கிரகதோஷத்தில் இருந்து தப்பிக்க எண்ணினால், அதற்கு ஏழுமலையானை சரணடைவது ஒன்றே வழி.