பதிவு செய்த நாள்
03
அக்
2016
12:10
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம், திருநகர் கோயில்களில் நவராத்திரி விழா துவங்கியது. சுப்பிரமணிய சுவாமி கோயிலில் முதல் நாள் ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் துர்க்கை அம்மன் அருள் பாலித்தார். இன்று முதல் அக். 10 வரை நக்கீரருக்கு காட்சி கொடுத்தல், ஊஞ்சல், பட்டாபிஷேகம், திருக்கல்யாணம், தபசு, மகிஷாசுரவர்த்தினி, சிவபூஜை, சரஸ்வதிபூஜை அலங்காரம் நடக்கிறது. அக். 11ல் சுப்பிரமணிய சுவாமி பசுமலையில் அம்பு போடும் நிகழ்ச்சி நடக்கிறது. திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் மீனாட்சி அம்மன், சிவ பூஜை காமாட்சி அம்மன், வடிவுடையம்மன், அன்னபூரணி, சாகம்பரி அம்மன், தனலட்சுமி, மகிஷாசுரவர்த்தினி, மகா சரஸ்வதி அலங்காரம். திருநகர் வரசித்தி விநாயகர் கோயில், பிரசன்ன வரதராஜப் பெருமாள் கோயிலில் பெருந்தேவி தாயாருக்கு, சந்தான அலங்காரம், கனக தாரா, ஆண்டாள், ராமர், கிருஷ்ணன், உலகளந்த பெருமாள், வாமன அவதாரம், சரஸ்வதி, அம்பு எய்தல் அலங்காரம். ஹார்விபட்டி பாலமுருகன் கோயிலில் ஊஞ்சல், பட்டாபிஷேகம், திருக்கல்யாணம், தபசு, மகிஷாசுரவர்த்தினி, சிவபூஜை, சரஸ்வதிபூஜை அலங்காரம் நடக்கிறது.