பதிவு செய்த நாள்
09
நவ
2016
12:11
பொள்ளாச்சி :வடசித்துார் மாரியம்மன் கோவில் திருக்கல்யாண உற்சவ விழா கடந்த, 4ம் தேதி துவங்கியது. கடந்த,5ம் தேதி கம்பம் நடுதலும், நேற்று அம்மனுக்கு நகை,பட்டு மற்றும் மாங்கல்யம் எடுத்தல் மற்றும் அய்யன் கோவிலில் இருந்து அம்மன் அழைப்பும், சக்தி கரகம் எடுத்தலும் பக்தியுடன் நடந்தது.இன்று அதிகாலை, 4.00 மணிக்கு அம்மன் திருக்கல்யாண அலங்கார பூஜை நடக்கிறது. 5.00 மணிக்கு மாவிளக்கு பூஜையும், தொடர்ந்து பொங்கலிடுதலும் நடக்கிறது. காலை, 11.00 மணிக்கு பூவோடு,உருவாரங்களின் ஊர்வலம் இரவு, 9.00 மணிக்கு அம்மன் சக்திகரகம், பூவோடு கங்கையில் கொண்டு போய்விடுதலும் நடக்கிறது.நாளை காலை, 9.00 மணிக்கு கோவிலுக்கு மஞ்சள் நீர் எடுத்து வருதலும், தொடர்ந்து அம்மன் திருவீதி உலாவும், மஞ்சள் நீராடலும் நடக்கிறது.