பதிவு செய்த நாள்
15
நவ
2016
11:11
திருப்போரூர்: திருப்போரூர், கந்தசுவாமி கோவிலில், ஐப்பசி மாத கிருத்திகை விழாவில், ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூரில் பிரசித்தி பெற்ற, கந்தசுவாமி கோவில் உள்ளது. இங்கு, ஐப்பசி மாத கிருத்திகை விழா, நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில், கந்தசுவாமி பெருமானுக்கு, சிறப்பு அர்ச்சனைகளும், தீபாராதனைகளும் நடைபெற்றன. விழாவில், சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராள மான பக்தர்கள் பங்கேற்று, முடி காணிக்கை செலுத்தி, சரவணப் பொய்கையில் நீராடி, அலகு குத்தி, காவடி எடுத்து நேர்த்திக்கடன்களை செலுத்தினர். மாலையில் வள்ளி, தெய்வானையுடன், சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய, உற்சவர் கந்தசுவாமி பெருமான், மாட வீதிகளில், திருவீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.