Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அகில பாரத ஐயப்பா சேவா சங்கம் ... திறக்கப்படாத உண்டியல் வீணாகிறது ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புதுப்பிக்கப்பட்ட பழங்கால கோவில்: பஸ் இயக்க கோரிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 நவ
2016
12:11

மடத்துக்குளம் : மடத்துக்குளம் அருகேயுள்ள குங்குமவல்லியம்மன் உடனமர் குலசேகரசாமி கோவில், புதுப்பிக்கப்பட்டுள்ள நிலையில், விசேஷ நாட்களில் கூடுதல் பஸ் இயக்கினால், அனைத்து தரப்பினரும் பயன்பெறுவார்கள் என கோரிக்கை விடப்பட்டுள்ளது. மடத்துக்குளம் பகுதியில் சோழர்கள் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட பல கோவில்கள் உள்ளன. இதில், சோழமாதேவி அமராவதி ஆற்றங்கரையில் அமைந்துள்ள குங்குமவல்லியம்மன் உடனமர் குலசேகரசாமி கோவில் குறிப்பிடத்தக்கதாகும். மண்ணுக்குள் புதைந்த நிலையில் இருந்த இந்த கோவிலை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், பொதுமக்கள் குழு அமைத்து புதுப்பித்து, கடந்த 2013 ஜனவரி மாதம் கும்பாபிேஷகம் நடத்தினர். இதற்குபின், கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த கோவில் சோழன் மன்னனின் பட்டத்து அரசி நினைவாக கட்டப்பட்டதால்,கோவில் அமைந்துள்ள கிராமம் சோழன்மாதேவி என்று அழைக்கப்பட்டு பின்னாளில் மருவி சோழ(ன்)மாதேவி என அமைந்ததாக வரலாற்று தகவல் உள்ளது.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த கோவிலின் சுற்றுமதில் மற்றும் உட்புற சுவர்களில் வட்டெழுத்து முறையில் பல்வேறு கல்வெட்டுக்கள் அமைந்துள்ளன. சிவராத்திரி, பிரதோஷம், சனிக்கிழமை மற்றும் முக்கிய விசேஷ நாட்களில் இந்த கோவிலுக்கு பல பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர். பொதுமக்கள் கூறுகையில், நமது பண்பாட்டையும், கலாச்சாரத்தையும், கலை நுணுக்கங்களையும் உள்ளடக்கியுள்ள இது போன்ற வரலாற்று சிறப்புமிக்க கோவில்கள் பாதுகாக்கப்பட வேண்டியவைகளாகும். பஸ் நிறுத்தத்தில் இருந்து ஒரு கி.மீ., க்கு அதிக தொலைவில் உள்ளதால் பெண்கள் மற்றும் குழந்தைகள் சென்று திரும்புவது மிகவும் சிரமமாக உள்ளது. கடத்துார் அர்ச்சுனேசுவரர் கோவிலுக்கு இயக்கியது போல், இந்த கோவிலுக்கும் விசேஷ நாட்களில் சிறப்பு பஸ்கள் இயக்க வேண்டும், என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அட்சய திருதியை நாளில், பூஜையறையில் குலதெய்வ  இஷ்ட தெய்வங்களை வணங்கி வழிபடும் போது, பூஜையில் தொழில் ... மேலும்
 
temple news
கூடலுார்: மங்கலதேவி கண்ணகி கோயில் சித்ரா பவுர்ணமி விழாவை முன்னிட்டு லோயர்கேம்ப் பளியன்குடி அடிவாரப் ... மேலும்
 
temple news
திருப்புவனம்: திருப்புவனத்தில் சிறுவர்கள் கொண்டாடிய சித்திரை திருவிழா பொதுமக்களிடையே ஆச்சர்யத்தை ... மேலும்
 
temple news
மதுரை: உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா இன்று காலை 10.35 மணி முதல் 10.59 ... மேலும்
 
temple news
குன்னூர்: குன்னூர் தந்தி மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவில் இன்று நகராட்சி சார்பில் புஷ்ப ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar