திருத்தணி: ஷீரடி சாய்பாபா கோவில்களில், பாலாபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நேற்று நடந்தன. திருத்தணி அடுத்த, தலையாறிதாங்கல் மற்றும் கே.ஜி.கண்டிகை ஆகிய பகுதிகளில் உள்ள ஷீரடி சாய்பாபா கோவில்களில், நேற்று, பாலாபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து, வண்ண மலர்களால் அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மாலை, 6:00 மணிக்கு, சேஜ் ஆரத்தியும் நடந்தது. இதில், திருத்தணி மற்றும் அதை சுற்றியுள்ள, கிராமங்களில் இருந்து, திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.