பதிவு செய்த நாள்
28
பிப்
2017
12:02
நாகப்பட்டினம், நாகூர் தர்கா கந்தூரி விழா, மினவராக்களில் பாய்மரம் ஏற்றும் வைபவத்துடன் துவங்கியது.நாகை அடுத்த, நாகூர் ஷாகுல் ஹமீது பாதுஷா நாயகம் தர்காவின், 460வது ஆண்டு கந்தூரி விழா, 28ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. முக்கிய நிகழ்வாக, மார்ச் 9 இரவு, நாகையில் இருந்து சந்தனக்கூடு ஊர்வலம் புறப்பட்டு, 10ம் தேதி, தர்காவில் சந்தனம் பூசும் வைபவம், 13ம் தேதி, கொடி இறக்கத்துடன் விழா நிறைவடைகிறது. கந்தூரி விழா துவக்க நிகழ்ச்சியாக, நேற்று அதிகாலை, 6:30 மணிக்கு, தர்கா பரம்பரை கலிபா சாஹிப் துவா ஓதிய பின், தர்காவின், ஐந்து மினவராக்களில் பாய்மரம் ஏற்றப்பட்டது. இதில், ஏராளமானோர் பங்கேற்றனர்.