Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஸ்ரீவி.,மாரியம்மன் கோயில் பூக்குழி ... சோமநாத ஈஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காட்பாடி அருகே வள்ளிமலை தேரோட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 மார்
2017
12:03

வேலுார்: காட்பாடி அருகே வள்ளிமலை முருகன் கோவில் தேரோட்டத்தில், ஆயிரக் கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். வேலுார் மாவட்டம், காட்பாடி அடுத்த வள்ளிமலையில், சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. பாடல் பெற்ற ஸ்தலமான வள்ளிமலை கோவில் பிரம்மோற்சவ விழா, நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி, 56 அடி உயரமுள்ள மரத்தேர் தேரோட்டம் நேற்று மாலை, 5:00 மணிக்கு நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்துச் சென்றனர். இந்த தேர், வள்ளிமலையை, நான்கு நாட்கள் சுற்றி, வரும், 12 மாலை, 5:00 மணிக்கு நிலையை வந்தடையும். அதுவரை மலையை சுற்றி உள்ள பல பகுதிகளில், இரவு நேரத்தில் மட்டும் தேர் நிறுத்தப்படும்.

இந்த தேரோட்டத்தில், தமிழகம், ஆந்திரா மாநிலங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். தேர் மீது, மிளகு, எலுமிச்சை, நவ தானியங்கள் ஆகியவற்றை பக்தர்கள் வீசி, தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர். தேரோட்டத்தை முன்னிட்டு, வேலுார் மாவட்ட எஸ்.பி., பகலவன் தலைமையில், 500 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். வேலுார், ராணிப்பேட்டை, சோளிங்கர், குடியாத்தம் ஆகிய பகுதிகளில் இருந்து, 100 தமிழ்நாடு அரசு சிறப்பு பஸ்களும், சித்துார், பலமனேர், திருப்பதியில் இருந்து, 40 ஆந்திரா மாநில சிறப்பு பஸ்களும், வரும், 12 வரை இயக்கப்படுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிவில் தினம் காலையில் யாகசாலை பூஜை ... மேலும்
 
temple news
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் இன்று ஐப்பசி வெள்ளிக்கிழமையை ... மேலும்
 
temple news
திருப்பூர்: சிவன்மலை சுப்ரமணிய‌சுவாமி கோவிலில் நேற்று முன்தினம் கந்த சஷ்டி விரதம் துவங்கியது. ஏராளமான ... மேலும்
 
temple news
கோவை; கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் அருள் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலில் ஐப்பசி மாதம் முதல் வெள்ளி ... மேலும்
 
temple news
திருப்பூர்; விஸ்வேஸ்வரர் கோவில் கந்த சஷ்டி  சூரசம்ஹாரம் விழாவிற்கு புதிதாக செய்யப்பட்டுள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar