திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி தேரோட்டம் மார்ச் 17ல் நடக்கிறது. தேர் வடம் பிடித்து இழுக்க கிராமத்தினரை அழைக்கும் நிகழ்ச்சி துவங்கியது.பங்குனி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சுப்பிரமணியசுவாமி, தெய்வானை திருக்கல்யாணம் மார்ச் 16 ல் மதியம் 12:00 முதல் 12:30 மணிக்குள் நடக்கிறது. மறுநாள் திருப்பரங்குன்றத்தை சுற்றியுள்ள 43 கிராமத்தினர், பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க மலையை சுற்றி பெரிய வைரத் தேர் வலம் வரும்.தேர் இழுக்க முக்கியஸ்தர்கள், கிராமத்தினரை அழைக்கும் நிகழ்ச்சி, முதல் ஸ்தானிக பட்டர் சுவாமிநாதன் தலைமையில் துவங்கியது. வீடு, வீடாக வெற்றிலை, பாக்கு, திருவிழா பத்திரிக்கை கொடுத்து அழைக்கின்றனர்.