பதிவு செய்த நாள்
10
மே
2017
02:05
சங்ககிரி: மகாசக்தி மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி, பக்தர்கள் பால்குடம் எடுத்து, அக்னி சட்டி ஏந்தி ஊர்வலம் சென்றனர். சங்ககிரி, ஆறாவது வார்டு, டி.பி., சாலையில், மகாசக்தி மாரியம்மன் கோவில் உள்ளது. கடந்த, 2ல், பூச்சாட்டுதலுடன் விழா தொடங்கியது. நேற்று காலை, பக்தர்கள் பால்குடம் எடுத்து, அலகு குத்தி, அக்னிசட்டி ஏந்தி முக்கிய வீதி வழியாக ஊர்வலமாக சென்று, சுவாமியை வழிபட்டனர். பொங்கல் நாளான இன்று, கோவில் வளாகத்தில் பக்தர்கள் பொங்கல் வைத்து, அம்மனுக்கு படைத்து வழிபட உள்ளனர்.