Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வேலூர் அம்மன் கலசம் ஊர்வலம் மாரியம்மன் கோவில் திருவிழா: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சேலம் கோவில்களில் 4வது ஆண்டாக அம்போவாகும் வைகாசி தேரோட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 மே
2017
02:05

சேலம்: சேலம், சுகவனேஸ்வரர், பெருமாள் கோவில்களில் வைகாசி தேரோட்டம், நான்காவது ஆண்டாக நிறுத்தப்படுவதற்கு, அதிகாரிகளின் அக்கறையின்மையே காரணம் என, பக்தர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

சேலம், சுகவனேஸ்வரர், கோட்டை அழகிரிநாத பெருமாள் கோவில்களில், வைகாசி விசாகத்தை முன்னிட்டு, தேரோட்டம் நடத்தப்படுவது வழக்கம். சேலம், ராஜகணபதி கோவில் அருகில் இருந்து துவங்கி, நான்கு வீதிகள் வழியாக வலம் வரும் தேர், இறுதியாக தேரடியில் நிறுத்தப்படுவது வழக்கம். இரண்டு கோவில்களின் தேர்கள் பழமையான நிலையில், கடந்த, 2012ல் சுகவனேஸ்வரர் கோவில் தேர் இயக்க முடியாமல் நிறுத்தப்பட்ட அதே ஆண்டில், பெருமாள் கோவில் தேரை கோவில் நிர்வாகம் மேற்கொண்டு இயக்கியது. அதற்கு மாநகராட்சி அதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்க மறுத்தனர். 2013ல், இரண்டு தேர்களுமே நிறுத்தப்பட்டது. அதன் பின்னர், மூன்று ஆண்டுகளாக தேரோட்டம் நடத்தப்படவில்லை. நடப்பாண்டு தேரோட்டம் நடத்தப்படும் என, எதிர்பார்க்கப்பட்டது. இரண்டு கோவில்களுக்கு தலா, 45 லட்சம் ரூபாய் மதிப்பில் தேர் தயாரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. தேருக்கான பணிகள் ஓராண்டாக, ஆமை வேகத்தில் நடப்பதால், நடப்பாண்டும் தேரோட்டம் நடத்துவது கேள்விக்குறியாகி விட்டது. இதனால், கடந்த ஆண்டுகளை போல், இந்த ஆண்டும் கோவில் நிர்வாகங்கள் சார்பில், பழைய தேர்களுக்கு பூஜை மட்டுமே நடத்தப்படும் என, தெரிகிறது.

இது குறித்து பக்தர்கள் கூறியதாவது:
சேலத்தின், பிரசித்தி பெற்ற சுகவனேஸ்வரர், பெருமாள் கோவில்களின் வைகாசி தேரோட்டம் நிறுத்தப்பட்டு, மூன்று ஆண்டுகள் முடிந்து விட்ட நிலையில், புதிய தேரின் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. இரண்டு தேர்களின் பணிகளையும் ஒரே ஒப்பந்ததாரருக்கு வழங்கியதால், பணிகள் ஆமை வேகத்தில் நடக்கிறது. தேர் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் ஆர்வம் காட்டாததாலே, நான்காவது ஆண்டாக தேரோட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவத்தில் இன்று மோகினி ... மேலும்
 
temple news
திருப்பதி;  ஜனாதிபதி திரௌபதி முர்மு திருமலையில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி இன்று தரிசனம் ... மேலும்
 
temple news
டில்லி; டில்லியில் விஜய யாத்திரை மேற்கொண்டுள்ள சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீட ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர பாரதீ ... மேலும்
 
temple news
கோவை;  கார்த்திகை மாதம் அனுஷம் நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை வடவள்ளி கஸ்தூரி நாயக்கன்பாளையம் கே. எஸ். ... மேலும்
 
temple news
பல்லடம்; பல்லடம் அருகே, கோர்ட் உத்தரவை பின்பற்றி, கோவிலை இடிக்கச் சென்ற அதிகாரிகளுடன், பொதுமக்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar