பதிவு செய்த நாள்
10
மே
2017
02:05
சத்தியமங்கலம்: மாசான பத்ரகாளியம்மன் கோவில், குண்டம் திருவிழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள், தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், கோட்டுவீராம்பாளையத்தில் பிரசித்தி பெற்ற, மாசான பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இங்கு, சித்திரை குண்டம் திருவிழா, கடந்த, 24ல் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. கடந்த, 2ல் பூவோடு வைத்தல், 5ல் அம்மனுக்கு நகை சாத்துதல் நிகழ்ச்சி நடந்தது. இந்நிலையில் நேற்று அதிகாலை, அம்மன் அழைத்தல் மற்றும் வரம் பெறுதல் நிகழ்ச்சி நடந்தது. இதை தொடர்ந்து குண்டத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்து, பூசாரி முதலில் குண்டம் இறங்கினார். இதையடுத்து பெண்கள், ஆண்கள், சிறுவர், சிறுமியர் என, 1,000த்துக்கும் மேற்பட்டோர் தீ மிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.