முருகப்பெருமானுக்கு கட்டப்பட்ட முதல் திருக்கோயில் என்ற சிறப்பைப் பெற்றது, புதுக்கோட்டை அருகேயுள்ள கண்ணனூர் தலம். இக்கோயிலை முதலாம் ஆதித்த சோழன் கட்டியதாகக் கூறப்படுகிறது. இங்கே முருகப்பெருமான் வித்தியாசமாக யானை வாகனத்துடன் ஒரு கையில் ஜபமாலை இருக்க, மறு கை சின்முத்திரை கொண்டும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.