பழநி: வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு, பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் நேற்று திருக்கல்யாணம் நடந்தது. இன்று தேரோட்டம் நடக்கிறது. பழநியில் வைகாசி விசாகத் திருவிழா ஜூன் 1 முதல் 10வரை நடக்கிறது. இதில் முக்கிய நிகழ்ச்சியாக நேற்றிரவு முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் திருக்கல்யாணம் நடந்தது. பின்னர் மணக்கோலத்தில் காமதேனு வாகனத்தில் சுவாமி திருவுலா வந்தார். ஏழாம் நாளான இன்று (ஜூன் 7) வைகாசி விசாகத்தை முன்னிட்டு, மலைக்கோயில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்படுகிறது. பெரியநாயகியம்மன் கோயிலில் மாலை 4.30 மணிக்கு, நான்கு ரதவீதிகளிலும் திருத்தேரோட்டம் நடக்கிறது. ஏற்பாடுகளை இணை ஆணையர் ராஜமாணிக்கம், துணை ஆணையர் மேனகா செய்கின்றனர்.