பதிவு செய்த நாள்
25
ஜூலை
2017
12:07
சங்கராபுரம்: சங்கராபுரம் வள்ளலார் மன்றத்தில் மழை வேண்டி சிறப்பு பிரார்த்தனை நடந்தது. வணிகர் பேரவை மாவட்ட பொருளாளர் முத்துகருப்பன் தலைமை தாங்கினார். ரோட்டரி தலைவர் வேங்கடநாராயணன், முன்னாள் தலைவர் ரகுநந்தன், அரிமா மாவட்ட தலைவர்கள் வேலு, ஜனனி மகாலிங்கம், முர்த்தி, முன்னிலை வகித்தனர். தமிழ்மணி அடிகள், சிவஞான அடிகள் முன்னிலையில் அகவல் படித்து மழை வேண்டி சிறப்பு பிரார்த்தனை நடந்தது. கூட்டுறவு வங்கி தலைவர் குசேலன், தலைமை ஆசிரியர் செல்வராஜ், இன்னர் வீல் கிளப் தலைவர் அகிலா ரவிசந்திரன், செயலாளர் மஞ்சுளா கோவிந்தராஜ், பொருளாளர் உஷாதேவி, கல்யாணி முத்துகருப்பன், ஆலத்துர் உழவார திருகூடம் நாச்சியப்பன், செட்டியந்துர் சன்மார்க்க சங்க தலைவர் ராமலிங்கம் உள்ளிட்ட பலர் பிரார்த்தனையில் கலந்து கொண்டனர்.