பூட்டை மாரியம்மன் திருவிழா வரும் 5ம் தேதி தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஆக 2017 01:08
சங்கராபுரம்: பூட்டை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா வரும் 4 ம் தேதி துவங்குகிறது. சங்கராபுரம் வட்டம், பூட்டை கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் தேர் திருவிழா, வரும் 4ம் தேதி துவங்குகிறது. அன்று ஊரணி பொங்கல், இரவு வான வேடிக்கை நிகழ்ச்சி நடக்கிறது. மறுநாள் ( 5ம் தேதி) அம்மன் தேர் ஏறுதல், நிகழ்ச்சி நடக்கிறது. பாலபட்டு ஜாகிர் முத்துசாமி, தேரோட்டத்தை துவக்கி வைக்கிறார். ஏற்பாடுகளை பூட்டை, செம்பராம்பட்டு, பாவளம் ஆகிய கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனர்.