பதிவு செய்த நாள்
02
ஆக
2017
01:08
குத்தம்பாக்கம் : குத்தம்பாக்கம், கங்கையம்மன் கோவிலில், வரும் 8ம் தேதி, தீமிதி திருவிழா நடைபெறுகிறது. வெள்ளவேடு அடுத்துள்ள குத்தம்பாக்கம் மதுரா இருளபாளையம் கிராமத்தில் அமைந்துள்ளது கங்கையம்மன் மாரியம்மன் கோவில். இந்த கோவிலில், ஆடி மாத தீமிதி திருவிழா, வரும் 8ம் தேதி நடைபெற உள்ளது. முன்னதாக, நேற்று முன்தினம், கங்கையம்மன் மற்றும் மாரியம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. பின், இன்று, காலை 10:30 மணிக்கு, மாரியம்மனுக்கு கூழ்வார்த்தல் நிகழ்ச்சியும், இரவு மாரியம்மன் சிலை ஊர்வலம் வருதலும் நடை பெறும். பின், வரும் 3ம் தேதி, மாலை கங்கையம்மனுக்கு கரகாட்டமும், தொடர்ந்து தீ மிதிக்கும் பக்தர்களுக்கு காப்பு கட்டுதலும் நடைபெறும். அதை தொடர்ந்து, தினமும், மாலையில் சுவாமி வீதிஉலா நடைபெறும். வரும் 8ம் தேதி, காலை 10:30 மணிக்கு கங்கையம்மனுக்கு கூழ்வார்த்தலும், பகல் 1:00 மணிக்கு, தீ மேடையில் தீ ஏற்றுதலும், மாலை 6:30 மணிக்கு தீமிதி திருவிழாவும் நடைபெறும். இரவு, கங்கையம்மன் சிறப்பு மலர் அலங்காரத்தில், வீதிஉலா நடை பெறும்.