சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் கோயிலில் 1008 திருவிளக்கு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஆக 2017 01:08
சிங்கம்புணரி சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் கோயிலில் 1008 திருவிளக்கு பூஜை நடந்தது. கோயில் சிவாச்சாரியார்கள் யாக பூஜைகளை நடத்தினர். இதையொட்டி மாலை 4:00 மணிக்கு சிம்ம வாகனத்தில் பிடாரி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். திருவிளக்கு பூஜையில் பங்கேற்ற ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களுக்கு மங்கலப்பொருட்கள் பிரசாதமாக வழங்கப்பட்டன. பூஜையையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.