திருவாடானை, திருவாடானை சிநேகவல்லிபுரம் முத்துமாரியம்மன் கோயில் திருவிழா நடந்தது. பக்தர்கள் அக்னி சட்டி எடுத்தும், பால்,பறவை,வேல் காவடிகள் எடுத்தும் பூக்குழி இறங்கினர். இரவில் கலைநிகழ்ச்சிகளும், அலங்கரிக்கபட்ட தேரில் அம்மன் வீதி உலாவும் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.