தொழுவூர்: தொழுவூர் மாரியம்மன் கோவிலில், வரும், 20ம் தேதி, தீமிதி திருவிழா நடக்கவுள்ளது. திருவள்ளூர் அடுத்த தொழுவூரில், மாரியம்மன் கோவில் உள்ளது. புராதன கோவிலான இது, 1800ம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டது. முன்னதாக, தீமிதி திருவிழா, 11ம் தேதி துவங்கியது. தினமும், அம்மன் வீதியுலா நடக்கிறது.முக்கிய நிகழ்ச்சியான,தீமிதித்தல், 20ம் தேதி மாலை, 6:00 மணிக்கு நடைபெறும். அதன் பின், அம்மன் மலர் அலங்காரத்தில் வீதியுலா எழுந்தருளுவார். மறுநாள் காலை விடையாற்றி உற்சவத்துடன் தீமிதி திருவிழா நிறைவு பெறும்.