மதுராந்தகம் : மதுராந்தகம் கன்னியம்மன் கோவில் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. மதுராந்தகம் ஏரிக்கரையில் கன்னியம்மன் கோவில் உள்ளது இங்கு, நேற்று கூழ் வார்த்தல்திருவிழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.காலையில் திரவுபதியம்மன் கோவிலிலிருந்து, பால்குடம், தீச்சட்டி ஏந்தி பக்தர்கள் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் வந்தனர்.அம்மன் திருவுருவவீதியுலாவும் விமரிசையாக நடைபெற்றது. அதை தொடர்ந்து மாலையில் தீமிதி விழாவும் நடைபெற்றது. சுற்று வட்டாரத்திலிருந்து ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசித்தனர்.