நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு நரியன் ஓடைக்கு அருகே உள்ள பாதாளகாளி கோவிலில் உள்ள பிரத்தியங்கரா தேவிக்கு அமாவாசையை முன்னிட்டு நிகும்பலா யாகம் நடந்தது. பூஜையை முன்னிட்டு நேற்று மதியம் 12:00 மணிக்கு யாக வேள்விகள் துவங்கி சிறப்பு ஹோமம் நடந்தது. 1:00 மணிக்கு ேஹாமத்தில் மிளகாய் வற்றல்கள் கொட்டப்பட்டு நிகும்பலா யாகம் நடந்தது. அதனையடுத்து, மகா தீபாராதனை நடந்தது. பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.