அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை செட்டிபட்டி அன்பு மாடல் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ ஷீரடி சாய்பாபா கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது. முதல் கால பூஜை என வல்வேறு பூஜைகள் நடந்தது. கடம் புறப்பாட்டிற்கு பின், மூல ஆலய விமானம் மற்றும் பரிவார விமான மகா கும்பாபிஷேகம் நடந்தது. சிறப்பு அபிசேகம் மற்றும் உபசார பூஜைகள் நடந்தது. சென்னை பூந்தமல்லி சித்தர் கோணி சாமி, சிந்தக்கரை ராமமூர்த்தி சாமி, மெட்டுக்குண்டு சங்கரேஸ்வர சாமி, மதுரை சாய்பாபா கோயில் மேனேஜிங் டிரஸ்ட் தலைவர் ஸ்ரீமதி ஜீனத் கனகராஜ், ராஜபாளையம் ராம்கோ குழும சேர்மன் வெங்கட்ராம ராஜா, டாக்டர் ரமணாஸ் கல்வியியல் கல்லுாரிமற்றும் ரமணாஸ் மகளிர் கலை கல்லாரி நிர்வாகிகள் டாக்டர் இளங்கோவன், சங்கரநாராயணன், ராமச்சந்திரன், பந்தல்குடி தொழில் அதிபர் அழகர்சாமி கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பந்தல்குடி ஸ்ரீ சாய்ராம் டிரஸ்ட் நிறுவனர் மற்றும் தலைவர் ’மனிததேனீ’ சுந்தரமூர்த்தி தலைமையில் நிர்வாகிகள் செய்தனர்.சிறப்பு அன்னதானம் நடந்தது. சாய் பஜன் நிகழ்ச்சிகள் நடந்தது. சாய் சங்கல்பம் என்ற தலைப்பில் சொற்பொழிவு நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.