Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news யஜுர் வேதிகளுக்கான ஆவணி அவிட்டம் ... திருக்கோஷ்டியூர் பெருமாள் கோயில்குளம் வறண்டது:  பக்தர்கள் வருத்தம் திருக்கோஷ்டியூர் பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கற்கால மனிதர்கள் வாழ்ந்த குகை: ராஜபாளையத்தில் கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
கற்கால மனிதர்கள் வாழ்ந்த குகை: ராஜபாளையத்தில் கண்டுபிடிப்பு

பதிவு செய்த நாள்

07 செப்
2017
11:09

விருதுநகர் : 7 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கற்கால மனிதர்கள் வாழ்ந்த குகை மற்றும் பாறை ஓவியங்கள் விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் மீனாட்சிபுரத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மீனாட்சிபுரத்தில் உள்ள குன்றுகளில் கற்கால மனிதர்கள் வாழ்ந்த சிறிய குகைகள் அதிகம் உள்ளன. இங்குள்ள மூன்று குகைகளில் 7 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வெள்ளை நிறத்தில் தீட்டப்பட்ட பாறை ஓவியங்கள் உள்ளன. இதில், வேட்டைக் காட்சிகள் காணப்படுகின்றன. குறிப்பாக மனிதர்கள் புலியை சுற்றி வளைத்து தாக்குவது, ஒரு விலங்கை சுற்றி வளைத்து தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து ஆரவாரம் செய்வது, கையில் ஆயுதங்களுடன் நிற்கும் மனிதன், கதிரவன் காட்சி, வேட்டையாடிய விலங்கை கையில் பிடித்து வரும் மனிதன், யானை உருவம், கருவுற்ற விலங்குகளின் உருவம், அந்த கூட்டத்தின் தலைவன் உருவம் என பல வகை ஓவியங்கள் காணப்படுகின்றன. இந்த குகை ஓவியங்கள் குறித்து மாங்குடி மலைக்கனி, நெல்லை தமிழாசிரியர் சங்கரநாராயணன் ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து சங்கரநாராயணன் கூறியதாவது: தமிழகத்தில் இதுவரை 55 முதல் 60 பாறை ஓவியம் கிடைத்துள்ளது. உலகளவில் பாறை ஓவியங்கள் பச்சை, சிவப்பு, வெள்ளை, கருப்பு என நான்கு நிறமாக பிரிக்கப்படுகிறது. மீனாட்சிபுரத்தில் கிடைத்தது வெள்ளை நிற பாறை ஓவியம். மூன்று குகைகளில், ஒரு குகை முழுவதும் ஓவியமாக உள்ளது. இதில், சூரியன் உட்பட பல ஓவியங்கள் அழகாக உள்ளன. மற்ற ஓவியங்கள் குறித்து ஆய்வு செய்து வருகிறேன். பாறை ஓவியம் மற்றும் தொன்மையான மனிதர்கள் வாழ்ந்த குகை அடங்கிய இந்த குன்றை தொன்மரபு சின்னமாக தொல்லியல் துறை அறிவித்து பாதுகாக்க வேண்டும். இதன் மூலம் பல அரிய தகவல் கிடைக்க வாய்ப்புள்ளது என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறையில் காவிரி துலா உற்சவத்தை முன்னிட்டு மாயூரநாதர் வதான்யேஸ்வரர் ஆலயங்களில் ... மேலும்
 
temple news
மூணாறு; சபரிமலை மண்டல கால மகர விளக்கு சீசன் நெருங்குவதால் சத்திரம், புல்மேடு வழியாக சபரிமலைக்கு ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
கோவை;  ஐப்பசி மாதம் சப்தமி திதி மற்றும் கடைசி செவ்வாய் கிழமையை முன்னிட்டு கோவை ஈச்சனாரி மகாலட்சுமி ... மேலும்
 
temple news
புதுடில்லி: ‘ஒருவர் நிரந்தரமான சந்தோஷத்தில் வாழ வேண்டுமெனில், தர்ம மார்க்கத்தில் இருப்பதுதான் ஒரே ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar