Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சுந்தர வரதராஜ பெருமாள் 23ம் தேதி ... பாடலீஸ்வரர் கோவிலில் கால ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அறநிலைய கமிஷனரிடம் கோவில் பூசாரிகள் புகார்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 செப்
2017
01:09

கோவில்களில் நடக்கும் முறைகேடுகள் குறித்து, அறநிலையத் துறை கமிஷனரிடம், கோவில் பூசாரிகள் நலச்சங்கத்தினர் புகார் அளித்தனர். அறநிலையத் துறை புதிய கமிஷனர், ஜெயாவை, தமிழக கோவில் பூசாரிகள் நலச்சங்க தலைவர் வாசு மற்றும் நிர்வாகிகள், நேற்று நேரில் சந்தித்தனர். அப்போது, கோவில்களில் நடக்கும் முறைகேடுகள் குறித்து, புகார் மனு அளித்தனர்.

அதன் விபரம்: பூசாரிகள் நல வாரியம் முடங்கி உள்ளது. அதை, புனரமைத்து பூசாரிகளின் வாழ்வாதாரத்தையும், நலனையும் காக்க வேண்டும். திருச்சி மாவட்டம், தொட்டியம் கிராமத்தில் உள்ள,லட்சுமி நாராயண பெருமாள் கோவில், அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோவிலுக்கு, தானமாக தரும் மாடுகளை, தனி நபர்கள் வீடுகளுக்கு கொண்டு சென்றுள்ளனர். எனவே, இந்த புரட்டாசி மாதத்தில் வரும் மாடுகளையாவது முறைப்படி, பூசாரிகளுக்கு வழங்க வேண்டும். அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் வழங்கப்படும் பிரசாதம், அந்தந்த மடப்பள்ளிகளில் தயாரிக்கப்பட வேண்டும். ஆனால், வெளியில் தயாரித்து கோவிலில் விற்கின்றனர். இது குறித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்.அரியலுார் மாவட்டம், கல்லங்குறிச்சி கலியுக வரதராஜ பெருமாள் கோவிலில், பக்தர்களின் காணிக்கையை, முத்திரை இல்லா உண்டியலில் வசூலித்து சுருட்டுகின்றனர். அங்குள்ள தானிய கிடங்கில் நடக்கும், முறைகேடுகளையும் தடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. - நமது நிருபர் -

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி ராப்பத்து உற்சவத்தின், 10ம் நாளான இன்று சந்திர ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், மஹா தீப கொப்பரையிலிருந்து சேகரிக்கப்பட்ட, ‘மஹா ... மேலும்
 
temple news
பாலக்காடு; கொல்லங்கோடு புலிக்கோடு ஐயப்பன் கோவில் ஆறாட்டு உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது.கேரள மாநிலம் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் பிரியாவிடை நிகழ்ச்சி நேற்றிரவு நடந்தது. ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வடகிழக்கு பருவமழை கொட்டித்தீர்த்தும், காஞ்சிபுரத்தில் கோவில் குளங்கள் சொட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar