Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சரஸ்வதி 108 போற்றி இறைவன் யாரை ரசிக்கிறான்?
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
ஒரு கேள்விக்கு ஒன்பது பதில் தெரியணும்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 செப்
2017
06:09

புத்திசாலியான மந்திரி ஒருவர், ராஜாவுக்கு என்ன பிரச்னை வந்தாலும் அதற்குரிய தீர்வைத் தெளிவாகச் சொல்லி விடுவார். இதனால்  ராஜாவுக்கு மந்திரி மேல் பிரியம் அதிகம். அந்த மந்திரிக்கு ஒரு தம்பி இருந்தார். அவர் ஒரு விவசாயி.  தன் மந்திரி அண்ணன் உழைப்பே  இல்லாமல் நிறைய சம்பாதிக்கிறானே என்று தம்பிக்கு பொறாமை. ஒருநாள் அண்ணனிடம், “நீ கொஞ்சநாள் விவசாயத்தைப் பார். எனக்கு  மந்திரி பதவி வாங்கிக்கொடு, என்றான். மந்திரியும் ராஜாவிடம் சிபாரிசு செய்து தம்பியை மந்திரியாக்கி விட்டார். ஒருநாள்
சாலையில் சில வண்டிகள் சென்றன. எத்தனை வண்டி போகிறது? என ராஜா பார்த்து வரச்சொன்னார். இவர் போய் பார்த்து விட்டு, “பத்து  வண்டி போகிறது, என்றார். வண்டியில் என்ன இருக்கிறது? என்றார்.

இதை புது மந்திரி கவனிக்கவில்லை. மீண்டும் ஓடிப்போய் பார்த்து வந்து நெல் மூடை போகிறது என்றார். அது என்ன விலை? என்று  ராஜா கேட்க, புது மந்திரி திரும்பவும் ஓடிச் சென்று பதில் வாங்கி வந்தார். இப்படி பல கேள்விகளுக்கு ஒவ்வொரு முறையும்
அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தார். அப்போது பழைய மந்திரி தற்செயலாக வந்தார். ராஜா அவரிடம், நீங்கள் வரும் வழியில்  வண்டிகளைப் பார்த்தீர்களா? என்றார் “ஆம் ராஜா! பத்து வண்டிகள் நம் அரண்மனையைக் கடந்தன. அதில் 200 மூடை நெல் பாண்டிய  நாட்டுக்குப் போகிறது. நம் சோழ நாட்டில் மூடைக்கு ஐந்து ரூபாய். அங்கே ஏழு ரூபாய் என்பதால் லாபம் கருதி அங்கே விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு செல்கிறார்கள், என தெளிவாகச் சொன்னார். தம்பி மந்திரி தலை குனிந்தார்.

நம்மை இந்த உலகத்துக்கு அனுப்பும் போதே ஆண்டவர், இவன் இன்ன விஷயத்துக்கு தகுதியானவர் என்று அனுப்புகிறார். இதை ஏற்று  நாம் நாமாக இருந்தாலே போதும். “நமக்கு அருளப்பட்ட கிருபையின் படியே, நாம் வெவ்வேறான வரங்கள் உள்ளவர்கள் என்ற வசனப்படி,  அவரவர் பணியை முழுமையாக செய்தாலே வாழ்வில் வெற்றி பெற்று விடலாம்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
சனீஸ்வரரின் மகனான இவருக்கு பலன் பார்க்கும் வழக்கம் தமிழகத்தில் ... மேலும்
 
தோஷம் இல்லை. நாட்டு வைத்தியரிடம் கொடுத்தால் வைத்தியம் செய்ய ... மேலும்
 
11வது அல்லது 16 வது நாளில் பெயர் ... மேலும்
 
* ஜபம் – காலை, மதியம், மாலையில் 108 முறை சொல்வது* உபாசனை – வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் ... மேலும்
 
அதிகாலை 4:30 – 6:00 மணி). மனம், உடம்பு புத்துணர்ச்சி பெறும் இந்த நேரத்தில் தியானம் மூலம் கடவுளோடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar