அழகுதிருமலைராயர் பெருமாள் கோவிலில் புரட்டாசி சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09அக் 2017 11:10
உடுமலை: உடுமலை அருகே, ஜல்லிபட்டி அழகுதிருமலைராயர் பெருமாள் கோவிலில், புரட்டாசி சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. உடுமலை, அருகே, ஜல்லிபட்டியில் அழகுதிருமலைராயர் பெருமாள் கோவில் உள்ளது. இக் கோவிலில், பெருமாளின் பாதசுவடுகளைத்தான் வழிபடுகின்றனர். புரட்டாசி சனிக்கிழமையையொட்டி, பாதங்களுக்கு மலர் அலங்காரம் செய்து காலை, 7:00 மணி முதல் சிறப்பு பூஜை நடந்தது. ஆஞ்சநேயருக்கு வெண்ணை காப்பு சாற்றி, சிறப்பு வழிபாடு நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.