பதிவு செய்த நாள்
09
அக்
2017
11:10
தர்மபுரி: சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள விநாயகர் கோவில்களில், நேற்று சிறப்பு பூஜை, அபிஷேகம் நடந்தது. தர்மபுரி எஸ்.வி.,ரோடு சாலை விநாயகர் கோவிலில், அதிகாலை, 6:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதையடுத்து, வெள்ளி கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு விநாயகர் அருள் பாலித்தார். தொடர்ந்து, எஸ்.வி., ரோடு, கடைவீதி, காந்தி சாலை, வெளிப்பேட்டை தெரு உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதேபோல், இலக்கியம்பட்டி சித்தி விநாயகர் கோவில், அன்னசாகரம் கோடி விநாயகர் கோவில், வெண்ணாம்பட்டி ரயில்வே கேட் குபேர கணபதி கோவில், நெசவாளர் காலனி சக்தி விநாயகர் கோவில், பாலக்கோடு பால்வண்ணநாதர் கோவில், காரிமங்கலம் ராஜகணபதி கோவில் உட்பட, மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் உள்ள விநாயகர் கோவில்களில், சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, விநாயகருக்கு நேற்று சிறப்பு பூஜை நடந்தது.
* கிருஷ்ணகிரி சப் - ஜெயில் ரோடு சித்தி விநாயகர் கோவிலில், நேற்று மாலை, 7:00 மணிக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி விநாயகருக்கு, 608 லிட்டர் பால் அபி?ஷகம் நடந்தது. பின், ராஜ அலங்காரத்தில் விநாயகர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த நிகழ்ச்சியையொட்டி ஏராளமான பெண்கள் நெய் விளக்கேற்றி சுவாமி தரிசனம் செய்தனர்.