Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரை மீனாட்சி அம்மனுக்கு ... முப்பூசை கேட்கும் கருப்பணசாமி: காவல் தெய்வத்தின் அருளாட்சி முப்பூசை கேட்கும் கருப்பணசாமி: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆற்றங்கரையில் சயனகோலத்தில் அருள்பாலிக்கும் மாசாணியம்மன்
எழுத்தின் அளவு:
ஆற்றங்கரையில் சயனகோலத்தில் அருள்பாலிக்கும் மாசாணியம்மன்

பதிவு செய்த நாள்

17 அக்
2017
11:10

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அடுத்த ஆனைமலையில் ஆற்றங்கரையில் வீற்றிருக்கும் மாசாணியம்மனை, மனமுருகி வேண்டுவோருக்கு நினைத்த காரியம் கைகூடும், மனக்கஷ்டம் விலகும், களவு போன பொருட்கள் கைக்கு வந்து சேரும் என்று பக்தர்கள் நம்புகின்றனர். கொங்குநாடு, 24 நாடுகளாக பிரிக்கப்பட்டிருந்தது. அதில், ஆனைமலையும் ஒன்றாக இருந்தது. ஆனைமலை சங்ககாலத்திலிருந்தே புண்ணிய பூமியாக கருதப்படுகிறது. நன்னன் என்னும் மன்னன் வாழ்ந்த ஊராகவும் கூறப்படுகிறது. கல்வெட்டுக்களில் ஆனைமலையை நன்னுார் என்றே சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சங்க காலத்தில் ஆனைமலையை ஆண்ட நன்னன் என்னும் மன்னன் ஆற்றங்கரையில் மாமரம் ஒன்று வளர்த்திருந்தான். அந்த மரத்திலிருந்து விழும் கனியை மற்றவர்கள் உட்கொள்ள தடையும் விதித்திருந்தான். மன்னனின் தடையையும் மீறி ஆற்றில் மிதந்து வந்த மாங்கனியை இளம்பெண் ஒருவர் உண்டதாகவும், அதற்கு மன்னன் அப்பெண்ணுக்கு தண்டனை க�ொடுத்து க�ொன்று விட்டதாகவும் கூறப்படுகிறது. அப்பெண் புதை க்கப்பட்ட இடத்தில், சக்தி இருந்ததை உணர்ந்த பொதுமக்கள் நாளடைவில் தெய்வமாக வழிபடத்துவங்கினர். இவ்வாறு, மாசாணியம்மன் கோவில் உருவானதாக, வாய்மொழி வரலாறு கூறுப்படுகிறது. மற்ற கோவில்களில் அம்மன் நின்ற கோலத்தில் அல்லது அமர்ந்த கோலத்தில் அருள்பாலிப்பார். ஆனால், மாசாணியம்மன் கோவிலில், சயன கோலத்தில், அருள்பாலிக்கும் மாசாணியம்மன் சிலை, 17 அடி நீளத்துக்கு இருப்பது தனிச் சிறப்பாகும். கோவிலில், ராஜகோபுரம், மேற்கு கோபுரம், கிழக்கு கோபுரங்கள் உள்ளன. கோவிலுக்கு தல விருட்சம் இல்லையென்றாலும், கொடி மரம் உள்ளது. விநாயகர், பேச்சியம்மன், துர்க்கை, புவனேஷ்வரி, மகாமுனி, கருப்பராயர் மற்றும் பைரவர் உள்ளிட்ட
சன்னதிகள் உள்ளன.

மாசாணியம்மனை காவல் தெய்வமாகவும், தீய சக்திகளில் இருந்து காக்கும் தெய்வமாகவும், நீதி தெய்வமாகவும் பக்தர்கள் நம்புகின்றனர். கோவிலில் உள்ள நீதிக்கல்லில் மிளகாய் அரைத்து அம்மனை வழிபடுகின்றனர். பில்லி, சூனியம், மாந்திரீகம், ஏவல், மோசடி உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மனமுருகி அம்மனை நினைத்து மிளகாய் அரைத்து; 96ம் நாளில் அம்மனுக்கு எண்ணெய் காப்பு நடத்தி வழிபடுவதால் தீங்கு செய்தவர்களுக்கு தண்டனை கிடைக்கும் என்கின்றனர் பக்தர்கள். திருமண தடை நீங்கவும், குழந்தை பாக்கியத்துக்கும் சிறப்பு வழிபாடு நடக்கிறது. மனகஷ்டங்களை போக்க, வேண்டுதலை முறையிட்டு சீட்டில் எழுதி, அம்மனுக்கு செலுத்தி வழிபடுகின்றனர். கோவிலில் ஆண்டுதோறும், தைத் திங்கள் அமாவாசை நாளில், திருவிழா கொடியேற்றப்படும். கொடி ஏற்றிய, 14ம் நாள் மயானக்கரை மண்ணில் அம்மனின் உருவச்சிலை செய்து மயான பூஜை செய்யப்படுகிறது. 15ம் நாள் கும்பஸ்தாபனம், 16ம் நாள் சித்திரை தேர் வடம் பிடித்தல்; 17ம் நாள் பக்தர்கள் குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவிலில், சித்திரை மாத மஹாப்பிரதோஷத்தை முன்னிட்டு, ராஜகோபுரம் அருகே உள்ள ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்காலில் திருநள்ளார் தர்பாரண்யேஸ்வரர் கோவில் பிரமோற்சவ விழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
குன்னூர்; குன்னூர் தந்தி மாரியம்மன் தேர் திருவிழாவில், அம்மன் சிம்ம வாகனத்தில் பவனி வந்தார்.நீலகிரி ... மேலும்
 
temple news
பந்தலூர்; பந்தலூர் அருகே பொன்னானி பகுதியில் அமைந்துள்ள, பிரசித்தி பெற்ற மகா ஸ்ரீ முத்துமாரியம்மன் ... மேலும்
 
temple news
பல்லடம்; காமநாயக்கன்பாளையத்தில், சப்த நதிகளின் தீர்த்தங்கள் வைத்து, மழை பெய்ய வேண்டிய சிறப்பு வழிபாடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar