பதிவு செய்த நாள்
17
அக்
2017
11:10
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கந்த சஷ்டி விழா அக்.,20 முதல் 25 வரை நடக்கிறது. அக்.,26 ல் காலை 7:00 மணிக்கு கூடல்குமாரருக்கு வெள்ளிக்கவசம் சாத்துபடியும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், சண்முகார்ச்சனை நடக்கிறது.
அக்.,18 தீபாவளியை முன்னிட்டு காலை, மாலை மீனாட்சி அம்மனுக்கு வைரக்கிரீடம், தங்கக் கவசம், சொக்கருக்கு வைர நெற்றிப்பட்டையும் சாத்துபடி செய்விக்கப்பட்டு சிறப்பு தரிசனம் செய்விக்கப்படும். கோலாட்ட உற்ஸவம் அக்.,20 முதல் 25 வரை நடக்கிறது. அக்.,20 முதல் 23 வரை மாலை 6:00 மணிக்கு மீனாட்சி அம்மன் எழுந்தருளி ஆடி வீதியில் சுற்றி வந்த பின் நாயக்கர் மண்டபத்தில் பத்தியுலாத்தி பின்பு கொலுச் சாவடி சேத்தியாகும். அக்.,24 மாலை 6:00 மணிக்கு மீனாட்சி அம்மன் வெள்ளி கோ ரதத்தில் சித்திரை வீதிகளில் எழுந்தருள்வார்.அக்.,25 மாலை 6:00 மணிக்கு மீனாட்சி சுந்தரேஸ்வரர் பஞ்சமூர்த்திகளுடன் வெள்ளி ரிஷப வாகனத்தில் அலங்காரமாகி ஆடி வீதியில் புறப்பாடு நடைபெறும். கந்த சஷ்டி விழா அக்.,20 முதல் 25 வரை நடக்கிறது. ஏற்பாடுகளை தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் நடராஜன் செய்திருந்தனர்.