பதிவு செய்த நாள்
21
அக்
2017
11:10
சேலம்: உலக நன்மைக்காக, சேலம், கோட்டை பெருமாள் கோவிலில், பவித்ர உற்சவ விழா, நவ., 7, 8, 9ல் நடக்கிறது. இதில், தரிசனம் செய்வதன் மூலம், பாவம் விலகும் என்பது ஐதீகம். 7 அதிகாலை, 5:00 முதல், மாலை, 5:30 மணி வரை, அழகிரிநாதருக்கு சிறப்பு பூஜை, அலங்காரம் சாத்துபடி செய்யப்படுகிறது. 8ல், சுவாமிக்கு பவித்ர மாலை சாத்துபடி நிகழ்ச்சி நடக்கிறது. 9ல், மஹா பூர்ணாஹூதி நிகழ்ச்சி நடக்கிறது.