Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தலைமலை கோயிலில் கிரிவலத்தை தடுக்க ... கோவிலுக்கு சுற்றுச்சுவர் பக்தர்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாரியூர் பூவேந்தியநாதர் கோயிலில் சேதமடைந்த நிலையில் சுற்று சுவர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 அக்
2017
12:10

சாயல்குடி: சாயல்குடி அருகே புராதன கோயிலான மாரியூர் பூவேந்தியநாதர் சமேத பவளநிறவல்லியம்மன் கோயில் சுற்றுச்சுவர் சேதமடைந்து பாதுகாப்பற்ற நிலை உள்ளதால் பக்தர்கள் வேதனையடைந்துள்ளனர்.ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்தின் நிர்வாகத்திற்குட்பட்ட இக் கோயில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கோயிலாக உள்ளது. இது கடற்கரை அருகே உள்ளதால், ஆடி, தை, மகாளய அமாவாசை நாட்களில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி விட்டு, சுவாமி தரிசனம் செய்வார்கள். கோயில் பிரகாரத்தை சுற்றிலும் கல்வெட்டுக்கள் பொறிக்கப்பட்டுள்ளது. வருண பகவானால் பூஜிக்கப்பட்ட பரிகார ஸ்தலமாக விளங்குவதால், வெளியூர்களில் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர். 6 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. கோயில் கட்டுமானங்கள் முற்றிலும் பாறையால் வடிவமைக்கப்பட்டுள்ளது. கோயிலின் தெற்குப்பகுதியில் 10 அடி உயரத்தில் காம்பவுண்டு சுவர் உள்ளது.

வடக்கு, கிழக்கு, மேற்குப்பகுதிகளில் உள்ள பாதுகாப்பு சுற்றுச்சுவர் சேதமடைந்தும், இடிபாடுகளுடன் உள்ளதால், பாதுகாப்பில் கேள்விக்குறியாக இருந்து வருகிறது. கடலாடியை சேர்ந்த சீனிவாசன் கூறுகையில்,பிரதோஷ விழாவில் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர்.சித்ரா பவுர்ணமியில் வலைவீசும் படலம் உள்ளிட்டவைகள் நடக்கிறது. மூன்று புறங்களிலும் சேதமடைந்த நிலையில் காம்பவுண்டு சுவர் உள்ளதால், ஆடு, மாடுகள் கோயிலுக்குள் தஞ்சமடைந்து விடுகிறது.இக்கோயிலில் சுற்றுச்சுவர் மீண்டும் எழுப்பிட இந்துசமய அறநிலையத்துறை மற்றும் ராமநாதபுரம் சமஸ்தான நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை, கூடலழகர் கோவிலில் புரட்டாசி பௌர்ணமியை  முன்னிட்டு பாலாபிஷேக கட்டளை சார்பாக ... மேலும்
 
temple news
உஜ்ஜைன்; மத்தியப் பிரதேசம், உஜ்ஜைனி மகாகாளேஸ்வரர் கோயிலில் ஷரத் பூர்ணிமாவை முன்னிட்டு கீர் வைத்து, ... மேலும்
 
temple news
அயோத்தி; அயோத்தி ஸ்ரீ ராம் ஜென்மபூமி மந்திரில் இன்று வால்மீகி ஜெயந்தி விழா சிறப்பாக ... மேலும்
 
temple news
கேரளா, பாலக்காடு, கல்பாத்தியில் பிரசித்தி பெற்ற விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோயில் தேர்த் திருவிழா நவ., 07 ... மேலும்
 
temple news
சுசீந்திரம்: திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலில் நடைபெற்ற நவராத்திரி விழாவிற்கு சென்றிருந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar