அத்தி சஞ்சயனம் என்பதற்கு எலும்பைச் சேகரித்தல் என்பது பொருள். நெருப்புத் தணிந்தபிறகு பிருதவி முதலிய முப்பத்தாறு தத்துவங்களையும் பூசித்து, சிதையில் நீரைச் சொரிந்து பிரித்து கால், கை, மார்பு, நெஞ்சு, முகம், தலை முதலிய பகுதிகளின் எலும்பை அதற்குரிய மந்திரத்தைக் கூறி எடுத்துப் பாத்திரத்தில் வைத்து, அதை புண்ணிய தீர்த்தத்தில் போட வேண்டும். சாம்பலை ஆழ்ந்து நீரில் இடவேண்டும்.