பதிவு செய்த நாள்
17
நவ
2017
11:11
மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரம், பெரியமாரியம்மன் கோவில் திருவிழா கோலாகலமாக நடந்தது. திருச்செங்கோடு தாலுகா, மல்லசமுத்திரம் சந்தைபேட்டை அருகே அமைந்துள்ள பெரியமாரியம்மன் கோவில் திருவிழா, ஐப்பசி மாதம் நடப்பது வழக்கம். அதன்படி, கடந்த, 2ல் விழா துவங்கியது. நாள்தோறும், அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபி ?ஷகம் நடந்தது. நேற்று அதிகாலை, அக்னி கரகம் எடுக்கப்பட்டது. 6:00 மணிக்கு பூ மிதிக்கப்பட்டது. மாலை, அலங்கரிக்கப்பட்ட திருத்தேரை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, முக்கிய வீதிகளின் வழியாக இழுத்துச் சென்றனர். இன்று மாலை, 3:00 மணிக்கு பூந்தேர் அழைத்தல், 4:00 மணிக்கு காட்டு மிராண்டி வேடம், வாண வேடிக்கை, மாலை, 6:00 மணிக்கு, ஏழு குதிரை பூட்டிய தேரில், சூரியநாராயண மூர்த்தி பவனி வருதல் ஆகியவை நடக்கிறது. நாளை, சத்தாபரணம் மற்றும் சிறப்பு வாணவேடிக்கை, 19 காலை, 9:00 மணிக்கு, மஞ்சள் நீராட்டு விழாவுடன் திருவிழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை, செயல் அலுவலர் ராஜகோபால், தக்கார் செல்வி உள்பட பலர் செய்திருந்தனர்.