Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலைக்கு காட்டுப்பாதைகளில் ...
முதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்
ஆன்லைனில் பதிவில் ஆப்சென்ட்: சபரிமலையில் குறைந்தது கூட்டம்
எழுத்தின் அளவு:
ஆன்லைனில் பதிவில் ஆப்சென்ட்: சபரிமலையில் குறைந்தது கூட்டம்

பதிவு செய்த நாள்

22 நவ
2025
11:11

சபரிமலை: சபரிமலையில் ஆன்லைன் முன்பதிவு செய்தவர்கள் முழுமையாக வராததால் காலை 6:00 மணிக்கு பின் சன்னிதானத்தில் கூட்டம் வெகுவாக குறைந்துள்ளது.


சபரிமலையில் மண்டல காலம் துவங்கிய நவ., 17, 18 தேதிகளில் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. தண்ணீர், உணவு இல்லாமல் 8 முதல் 10 மணி நேரம் வரை பக்தர்கள் வரிசையில் காத்து கிடந்தனர். பம்பையில் பல மணி நேரம் பக்தர்கள் காக்க வைக்கப்பட்டதால் ஏராளமானவர்கள் ஐயப்பசுவாமியை தரிசனம் செய்ய முடியாமல் திரும்பி சென்று பந்தளத்தில் தங்கள் பயணத்தை முடித்து சொந்த ஊருக்கு திரும்பி சென்றனர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் கேரள உயர்நீதிமன்றம் தலையிட்டு ஸ்பாட் புக்கிங் எண்ணிக்கையை 5 ஆயிரமாக குறைத்தது. இந்த கவுன்டர்கள் தற்போது நிலக்கல் மற்றும் வண்டிப்பெரியாரில் மட்டுமே உள்ளது. பம்பை, எருமேலி உள்ளிட்ட பல இடங்களிலும் இந்த கவுண்டர்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. ஸ்பாட் புக்கிங் எண்ணிக்கை 20 ஆயிரத்தில் இருந்து ஐந்தாயிரமாக குறைக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் இருமுடி எடுத்து வருவதில் தயக்கம் காட்டுகின்றனர். நிலக்கல்லில் அதிகாலை 3:00 மணிக்கு ஸ்பாட் புக்கிங் தொடங்கிய அரை மணி நேரத்தில் அனைத்து டிக்கெட்டுகளும் முன்பதிவு ஆகிவிடுகிறது. அதன்பின் வரும் பக்தர்கள் நிலக்கல்லிலேயே காத்திருக்க வேண்டிய நிலை இருக்கிறது. தினமும் 70 ஆயிரம் பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு செய்துள்ள நிலையில் அதில் 55,000 பேர் மட்டுமே சபரிமலை வருகின்றனர். இதனால் நேற்று காலை 6:00 மணிக்கு பின்னர் பெரிய நடை பந்தலில் வரிசை இல்லாத நிலை காணப்பட்டது. வரும் பக்தர்கள் எந்த சிரமமும் இல்லாமல் தரிசனம் முடித்து செல்கின்றனர். 

 
மேலும் ஐயப்பன் செய்திகள் »
temple news
சபரிமலை; பக்தர்களின் வசதிக்காக பெருவழிப்பாதை மற்றும் புல்மேடு - சத்திரம் பாதையில் பக்தர்கள் ... மேலும்
 
temple news
சபரிமலை: கேரள உயர்நீதிமன்றத்தின் உத்தரவு எதிரொலியாக சபரிமலையில் இயல்பு நிலை திரும்பியது. ஸ்பாட் ... மேலும்
 
temple news
சபரிமலை; கேரளாவின் சபரிமலை அய்யப்பன் கோயில் மண்டல பூஜை கடந்த 17ல் துவங்கியது. இதையொட்டி, 16ம் தேதி மாலை ... மேலும்
 
temple news
திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் கூட்ட நெரிசல் அதிகரித்துள்ளதற்கு அதிருப்தி தெரிவித்த கேரள ... மேலும்
 
temple news
சபரிமலை: கேரள மாநிலம், சபரிமலையில் மண்டல சீசன் துவங்கிய முதல் இரு நாட்களிலேயே பக்தர்கள் கூட்டம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar