Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமேஸ்வரத்தில் சுற்றுலா வழிகாட்ட ... கன்னிவாடி நவாப்பட்டியில், ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கும்பகோணம் அருகே, அணைக்கரை வில்லியாண்டவர் கோவில் கோவில் சிலைகளை பாதுகாப்பு மையத்துக்கு எடுத்து செல்ல கிராம மக்கள் கடும் எதிர்ப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஜன
2018
11:01

தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே, அணைக்கரை வில்லியாண்டவர் கோவில் சிலைகளை, பாதுகாப்பு மையத்துக்கு எடுத்து செல்ல, கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளை முற்றுகையிட்டனர்.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே, அணைக்கரையில், பழமையான வில்லியாண் டவர் கோவில் உள்ளது.

இக்கோவிலுக்கு சொந்தமான, பூர்ணா, புஷ்கலா, வில்லியாண்டவர், அஸ்திரதேவர் உள்ளிட்ட, ஆறு ஐம்பொன்சிலைகளும், ஏழு வெள்ளி கவசங்களும், மாரியம்மன் கோவிலுக்கு சொந்த மான, மூன்று ஐம்பொன் சிலைகளும், அணைக்கரை பொதுப்பணித்துறை அலுவலகத்தில் பாதுகாக்கப்பட்டது.

இதற்கு எவ்வித முன்அனுமதியும் பெறப்படவில்லை என்பது தெரியவந்த நிலையில், உற்சவ சிலைகள், விநாயகம் தெருவில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு மாற்றப்பட்டன.

இந்நிலையில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தலைமையிலான போலீசார், இக்கோவிலில் சில வாரங்களுக்கு முன் ஆய்வு நடத்தினர்.

அப்போது, ஆறு சிலைகள் மட்டும் தான் இருப்பதாக கூறப்பட்டது; மற்ற சிலைகள் குறித்து தெளிவாக தெரிவிக்கப்படவில்லை.

இந்நிலையில், திடீரென நேற்று, மாரியம்மன் கோவிலில் உள்ள சிலைகளையும், வெள்ளி கவசங்களையும், இந்துசமய அறநிலையத்துறையின் செயல் அலுவலர், குணசேகரன், திரு விடைமருதூர் தாசில்தார், ராஜேஸ்வரி மற்றும் பணியாளர்கள், கும்பகோணத்தில் உள்ள உலோக சிலைகள் பாதுகாப்பு மையத்துக்கு எடுத்துச் செல்ல, போலீசாருடன் வந்தனர்.

அப்போது, உற்சவ சிலைகள் எடுத்து செல்வதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதிகாரிகளை 300க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டனர். ஒருவார கால அவகாசத்தில், நீதிமன்றத்தை நாடி, கோவிலிலேயே சிலைகளை, கிராம மக்களே பாதுகாக்க, உரிய உத்தர வுகளை பெற்று கொள்ளுமாறு அதிகாரிகள் கூறினர்.

இல்லாவிடில், உற்சவ சிலைகளை பாதுகாப்பு கருதி, சிலைகள் பாதுகாப்பு மையத்துக்கு எடுத்துச் செல்வதை தவிர வேறு வழியில்லை என்று கூறிய அதிகாரிகள், அங்கிருந்து புறப் பட்டு சென்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவில் இன்று திருக்கல்யாணம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.திருவண்ணாமலை ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி வட்டம், கருவலூரில் மாரியம்மன் கோவிலில் பங்குனி தேர் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர்; ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
சிவகங்கை; சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் கோயில் பங்குனி திருவிழாவை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar