பெருந்துறை: பெருந்துறை அருகே, சக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, நடந்தது. பெருந்துறை அடுத்த, நசியனூர், வேட்டைப்பெரியாம்பாளையம், விநாயகர் மற்றும் சக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, நேற்று காலை நடந்தது. ரமணி சிவம் சிவாச்சாரியார் தலைமையில், கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேக விழா நடத்தினார். ஏராளமான மக்கள் பங்கேற்றனர்.