எட்டயபுரத்தில் நடக்க இருந்த தம்பியின் திருமணத்தில் பங்கேற்க முத்துசுவாமி தீட்சிதர், மாட்டுவண்டியில் சென்று கொண்டிருந்தார். சாத்தூரில் இருந்து எட்டயபுரம் செல்லும் வழியில் பூமி, தண்ணீரின்றி வறண்டு கிடந்தது. மக்கள் வறுமையால் செய்வதறியாமல் தவித்தனர். இதை கண்ட தீட்சிதர் மனம் வருந்தினார். அம்பிகை மீது அமிர்தவர்ஷினி ராகத்தில் பாட தொடங்கினார். சிறிது நேரத்தில் குளிர் காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. தீட்சிதர் பயணம் செய்த வண்டிச் சக்கரமும் சேற்றில் புதைந்தது. அம்பிகை மீது மீண்டும் பாடல் பாடி மழையை நிற்கச் செய்தார். தீட்சிதரின் தெய்வீக சக்தியறிந்து நன்றி தெரிவித்தனர் மக்கள். “எல்லாம் அம்பாளின் விளையாட்டு! அவளை சரணடைந்தால் வளமோடு வாழலாம்” என்று சொல்லி புறப்பட்டார்.