திருநெல்வேலி: நெல்லையப்பர் கோயிலிலும் நுழைவு மண்டபத்தில் உள்ள கடைகளை அகற்ற வலியுறுத்தி இந்துமுன்னணியினர் கோயில் நிர்வாகத்திடம் மனு அளித்தனர்.மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் அண்மையில் ஏற்பட்ட தீ விபத்திற்கு பிறகு பல்வேறு கோயில்களிலும்விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன்.தமிழக அறநிலையத்துறை கோயில்களில் கற்பூரம் கொளுத்த ஏற்கனவே தடையுள்ளது.இருப்பினும் தற்போது தீபவழிபாட்டையும் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே மேற்கொள்ள நெல்லையப்பர் கோயில் நிர்வாகம் உத்தரவிட்டது.இந்நிலையில் நெல்லையப்பர் கோயிலின் நுழைவு மண்டபத்தில் கடைகள் உள்ளன. அவற்றை அகற்றிட வேண்டும் என வலியுறுத்தி இந்துமுன்னணி மாநில நிர்வாக குழு உறுப்பினர் குற்றாலநாதன், மாவட்ட செயலாளர் வினோத் உள்ளிட்டோர் கோயில் நிர்வாகத்திடம் மனுஅளித்தனர்.