சிவராத்திரியன்றைய தினத்தில், ஆதிசங்கரர் அருளிய லிங்காஷ்டகத்தை படிப்பதால், ஜாதகத்தில் சூரியன் மற்றும் குருவால் ஏற்படும் குறைகள் நீங்கும். நோய் அகன்று நலம் பெறலாம். சகல மங்களங்களும் உண்டாகும். இதில் எட்டு ஸ்லோகங்கள் உள்ளன.
“பிரம்மா, மகாவிஷ்ணு மற்றும் தேவர்களால் வணங்கப்படுவதும், பிரகாசமானதும், அழகுள்ளதும், துக்கத்தைப் போக்குவதும், எப்போதும் மங்கலத்தை அருள்வதுமான மகாலிங்கத்தை போற்றுகிறேன்...” என சொல்லி விட்டு, இந்த ஸ்லோகத்தை சொல்ல வேண்டும். இதிலுள்ள முக்கிய ஸ்லோகமும், அதன் பொருளும் தரப்பட்டுள்ளது.