புராணத்தில் சிவராத்திரிக்கு சிலகாரணங்கள் சொல்லப்படுகின்றன. *பிரம்மா, விஷ்ணு ஆகியோரின் தற்பெருமையை அடக்குவதற்காக சிவபெருமான் லிங்கோத்பவராக விண்ணுக்கும் மண்ணுக்குமாக உயர்ந்து உயர்ந்து நின்றார். அந்த நாளே சிவராத்திரி. *உமையவளான பார்வதி கண்விழித்து நான்கு ஜாமத்திலும் அபிஷேகம் செய்து ஈசனை பூஜித்த வேளையே சிவராத்திரி. *ஒருசமயம், விளையாட்டாக இறைவனின் கண்ணை மறைத்தாள் பார்வதி. உலகமே இருண்டுபோனது உயிர்கள் செய்வதறியாமல் சிவனை சரணடைந்த நாளே சிவராத்திரி. *பாற்கடலில் எழுந்த ஆலகால விஷத்தை சிவன் அருந்தினார். அந்த இரவில் தேவர்கள் கண்விழித்து சிவனை வழிபட்டனர். அந்த இரவே சிவராத்திரி.