தாரபுரத்தில் எட்டடி உயரமும், ஆறடி அகலமும் கொண்டு காடனுமார் என்ற பெயரில் அனுமன் எழுந்தருளியுள்ளார். அலகாபாத் திரிவேணி சங்கமத்தின் அருகே ஓய்வெடுப்பதற்காகப் படுத்திருக்கும் கோலத்தில ஆஞ்சநேயரை தரிசிக்கலாம். சோளிங்கரில் சங்கு, சக்ரதாரியாக கையில் ஜபமாலையுடன் தரிசனம் தருகிறார். அனுமன், இவரை வேண்டினால் பேய், பிசாசு, பில்லி, சூன்யம் போன்ற தீயசக்திகளின் பாதிப்புகள் அகலும் என்பது நம்பிக்கை.